Translate

Wednesday 11 March 2015

என்னுள் நீ

நாள்தோறும் விழிகளில் தென்படும் ஒளியாய் இருப்பது நீ..!
சிந்தனையில் தோன்றும் எண்ணமாய் இருப்பதும் நீ..!
இரவில் தோன்றும் கற்பனையும் நீ..!
என்னை தானாக புன்னகை புரிய வைப்பவனும் நீ..!
எனக்குள் மறைந்து வாழ்பவனும் நீ..!
நீ..நீ..அனைத்தும் நீயே..!
நான் நீயாக மாறபோவது எப்பொழுது..?

நீ இருந்தால் நான் இருப்பேன்.

நான் சாயும் தோளாக
உன் தோள் இருந்தால்
கனவுகளும் நிஜமாகும்..!
பூமி மணலாய்
நீ இருபாய்யெனில்
மலராய் மலர்ந்து
மடிவேன்
உன் மடியிள் வாடி...!

Sunday 20 July 2014

கல்லூரி தாய்


நான்கு வருடம் நம்மை சுமந்த இந்த கல்லூரி தாய்க்கும் நமக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி இன்று அறுந்தது...!

நம்மை சிறந்த மனிதர்களாக வலிமை மிக்கவர்களாக வெளி வாழ்வுக்கு ஏற்ப பாடம் கற்றுக்கொடுத்து இப்போது நம்மை ஈன்றெடுத்த இந்த நொடியில் அழுகையுடன் அவளை விட்டு வெளியேறுகிறோம்...!

எனது உலகமாய் நான் எண்ணிய இந்த கல்லூரியை என் மரணத்திலும் மறக்க முடியாது
சிறந்த நண்பர்கள்,உறவை போன்ற உயிர்கள், குடும்பத்தை போல பாசம் என அனைத்தும் நிறைந்து இருக்கிறது இந்த கல்லூரியில்...!

நாம் கற்றது படிப்பு பாடம் மட்டும் அல்ல வாழ்க்கை பாடமும் தான்...!

வேண்டாம் வேண்டாம் என்று ஆயிரம் முறை சொன்னாலும் இந்த கல்லுரி வாழ்க்கையோ இப்போது முடிவிற்கு வந்து விட்டது...!

இந்த கல்லூரியை விட்டு விடை பெற்றாலும் என் குடும்பமாகிய நண்பர்களிடம் இருந்து என் மரணம் அப்போது தான் நான் விடை பெறுவேன்....!!!!

Saturday 1 March 2014

:: நம் கல்லூரி கால நட்பு ::

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்
என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!

முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி
முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!

என் முகம் வாடிக்கிடக்க,
நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!

தினம் தினம் நமது கால்கள்
ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே
இன்பம், துன்பம் அனைத்தையும்
பகிர்ந்தபடியே மெல்ல சென்றது
கல்லூரி கால நாட்கள்...!

இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும்
நம் நட்புக்கு முடிவு
என்பதே இல்லை என்றும்...!

தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!!

Sunday 2 February 2014

My Love On Him...!

A cute line said by a girl Deeply in love with a
boy ,

''I dnt fear 2 lose him"

but

my fear is that if i lose him,
"who will love him like me ?

அழகு..!

அவள் கொண்ட முகமழகு
அதைவிட
நான் கண்ட அகமழகு!

வெட்டாமல் வளர்ந்து விட்ட நகமழகு
அதைவிட
பெண்களுக்குள் அவளின் தனி ரகமழகு!

வெகுளியா பேசுகின்ற மொழியழகு
அதைவிட
விவரத்தை வெட்கத்தில் புதைத்தாலும் கசிந்துவிடும் விழியழகு!

விரல் கோர்த்து நடக்கும் போது வழியழகு
அதைவிட
விரல்மட்டும் தொட்டதனால் அத்தனையும் என்மேல் போட்டுவிடும் பழியழகு!

அவளோடு இருக்கின்ற இனிமையழகு
அதைவிட
அவள் நினைவுகளில் கழிக்கின்ற என் தனிமையழகு!

என்னாலே மலருகின்ற சிரிப்பழகு
அதைவிட
நான் பார்க்குமுன்னே துடைக்கின்ற கண்ணீரழகு!

ஆகாயமழகு பூமியுமழகு
அதைவிட
அவளோடிருக்கையிலே அமாவாசை நிலவும் அப்படியோர் பேரழகு!

காரணமில்லாமல் எனை திட்டிக்கொள்வதழகு
அதைவிட
காரியம் முடிந்தபின் எனை கட்டிக்கொள்வதழகு!